Wednesday, March 19, 2014

Analyzing SQL Server Modules

There might be situations where you find mysterious behaviours of your SQL Server Stored Procedures or Functions probably while deploying a lengthy script with multiple creations or alterations of SPs or Functions. In such cases a DROP statement of one stored procedure could accidentally get included in the CREATE script of another one, possibly if you had forgotten the batch terminator GO. Recently at my workplace we were puzzled to see a stored procedure getting disappeared hours after deployment. After some hazzle, search on the internet, I posted this question on StackOverflow, I was able to get a good suggestion from this guy, to check on tracing the usage of the stored procedure by suggesting the following query on this post.

By querying the sys.sql_modules we'll be able to get the definitions of all stored procedures and functions.

SELECT o.type_desc AS ROUTINE_TYPE
        ,o.[name] AS ROUTINE_NAME
        ,m.definition AS ROUTINE_DEFINITION
FROM sys.sql_modules AS m
INNER JOIN sys.objects AS o
    ON m.object_id = o.object_id
WHERE m.definition LIKE '%search term here%'
The search term could be partial name of the stored procedure in question and the "Definition" field will give the complete script on the creation of that SP or Function.

Wednesday, February 19, 2014

Creating Object instances with a LINQ query


I've written many lines of code with LINQ, yet until I came across one astonishing example, which made my jaws drop. Wow.... The following example on MSDN demonstrates the power and beauty of LINQ of how you can create object instances on the fly with a single statement:

This is the sample class:

class Contact
    {
        // Read-only properties. 
        public string Name { get; private set; }
        public string Address { get; private set; }

        // Public constructor. 
        public Contact(string contactName, string contactAddress)
        {
            Name = contactName;
            Address = contactAddress;               
        }
    }

This is the sample code:
// Some simple data sources. 
string[] names = {"Terry Adams","Fadi Fakhouri", "Hanying Feng", 
                              "Cesar Garcia", "Debra Garcia"};
string[] addresses = {"123 Main St.", "345 Cypress Ave.", "678 1st Ave","12 108th St.", "89 E. 42nd St."};

// Simple query to demonstrate object creation in select clause. 
// Create Contact objects by using a constructor. 
var query1 = from i in Enumerable.Range(0, 5)
             select new Contact(names[i],addresses[i]);


Monday, November 25, 2013

Angola denies "BAN of ISLAM"

இணையத்தை தேடும் போது, இதுவும் வதந்தி அடிப்படையில் வந்த செய்தியாகவே தோன்றுகின்றது. குறித்த நாட்டில் பெரும்பான்மை கிறிஸ்தவர்களுக்கும் 1% இற்கும் குறைவான முஸ்லிம் சமூகத்துக்கும் இடையில் முறுகல் நிலை உள்ளது என்பது உண்மையே. ஆனால் இப்படி ஒரு முடிவை தமது அரசாங்கம் எடுக்காது என்றும், தமக்கு அப்படி ஒன்றை அறிவிக்கவில்லை என்றும் அமெரிக்காவில் உள்ள அங்கோலா நாட்டு உயர்ஸ்தானிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அநேக சமூக வலைதளங்களில் இந்த செய்தியுடன் பரப்பப்பட்ட பள்ளி ஒன்று இடிந்து விழுவது 2008 ஆம் ஆண்டில் இஸ்ரேல் நாட்டில் எடுக்கப்பட்டது என்று International Business Times கருத்து தெரிவித்துள்ளது. ஒரு செய்தி "அங்கு சொல்கிறார்கள், இங்கு சொல்கிறார்கள்" என்று துவங்கினால், அது ஒரு வதந்திகான முழு தகைமைகளையும் கொண்டது எனலாம்.

பொறுப்புள்ள முஸ்லிம் சமூகம் என்கிற வகையில் சில "பரபரப்பான" செய்திகளை ஆர்வத்துடன் பதிவிடுவதற்கு முன்பு, குறித்த செய்தி "பரபரப்பாக" பேசப்படுவதற்கான காரணம் என்ன என்பவற்றை ஆராய்ந்து பதிவிட்டால் "வதந்தி" பரப்பிய பாவத்திலிருந்து நாமும் விடுபடலாம்.

IBL இன் முழு செய்தி இதோ:


Thursday, August 29, 2013

Alternative way to get latest selected value from a Combo Box

In .NET at times the ComboBox acts strangely, when you try to select a value but returns a null value (Though the value is displayed in the dropdown list). Using the following work around in the SelectedIndexChanged event or SelectionChangeCommitted event should do the needful.

foreach (Binding binding in (sender as ComboBox).DataBindings)
                {
                    binding.WriteValue();
                }

  var whateverObject = (sender as ComboBox).SelectedItem;

If anybody could explain on what cases a null could be returned, it would benefit many including me. Until that the above solution should save your day.

Tuesday, April 23, 2013

Gearing up with Scrum

The guy in-charge of implementing Scrum at our office did an introductory session today at office. It creates a major break through from traditional project management by breaking up tasks in to manageable pieces, and short achievable deadlines. Tasks are generated in the form of User Stories and put up in the Product Backlog. A Product Owner will be responsible to prioritizing these user stories and will create a Release Backlog. A release backlog will have many Sprints which are either 2-4 weeks in length. The scrum team will be coached by a Scrum Master, who is in charge of driving the team. At the end of each sprint a working product should be available to show to the customer.

During the session many other colleagues asked their doubts and concerns over the process. I asked two questions for my part:

  1. If there is any particular feature request which the overall functionality could only be implemented for more than 4 weeks, how do we convince the customer?
Answer : No task can span more than 4 weeks. If there is such functionality it should be discussed with the team and should be broken into small chunks. Or such a sprint cannot continue.

     2. Regarding stakeholders, there are two roles; Involving or Committing. Will a particular resource(ex: A developer) be assigned to multiple scrum teams in parallel?

Answer : No. Scrum doesn't permit.

There was a nice video shared by a colleague which gives a quick insight into Scrum:


Tip to avoid flickers caused by Memory consuming controls.

You might face a situation where some standard or 3rd party controls being used in your application across various forms/windows. In any case you have a situation where you don't close any of the forms where those controls are being used, instead you hide them for some reason. These controls might cause a flickering effect on other forms particularly when the hosting machine is slow.

Recently I came across such a situation where an opensource listview control was causing a black ribbon like effect on other screens. After trying various ways, I was able to avoid it by disabling the visibility of it upon the Form Leave / Page Leave event.

Thursday, March 21, 2013

Difference between the keywords dynamic, var and object from C# 4.0 onwards

As a seasoned or professional developer in C#.NET, you will find many innovative features in the .NET framework supported to speed up development as well as reduce confusion in code. .NET 3.5 introduced the var keyword, and most of the time many blog posts and articles associated it with LINQ without the need to specify the type explicitly. Then .NET 4.0 introduced a keyword called "dynamic" which made us ask the question why another? As having extensively used System.Object for many interoperability related work, the introduction of these new keywords and it's uses might confuse developers as for why,when and where should these keywords be used etc. Below is an excellent excerpt from an article by Alexandra Rusina (Understanding the Dynamic Keyword in C# 4), which clarifies the differences between the three.


Dynamic, Object or Var?

So what’s the real difference between dynamic, object and var, and when should you use them? Here are short definitions of each keyword and some examples.
The object –keyword represents the System.Object type, which is the root type in the C# class hierarchy. This keyword is often used when there’s no way to identify the object type at compile time, which often happens in various interoperability scenarios.
You need to use explicit casts to convert a variable declared as object to a specific type:
  1. object objExample = 10;
  2. Console.WriteLine(objExample.GetType());
This obviously prints System.Int32. However, the static type is System.Object, so you need an explicit cast here:
  1. objExample = (int)objExample + 10;
You can assign values of different types because they all inherit from System.Object:
  1. objExample = "test";
The var keyword, since C# 3.0, is used for implicitly typed local variables and for anonymous types. This keyword is often used with LINQ. When a variable is declared by using the var keyword, the variable’s type is inferred from the initialization string at compile time. The type of the variable can’t be changed at run time. If the compiler can’t infer the type, it produces a compilation error:
  1. var varExample = 10;
  2. Console.WriteLine(varExample.GetType());
This prints System.Int32, and it’s the same as the static type.
In the following example, no cast is required because varExample’s static typed is System.Int32:
  1. varExample = varExample + 10;
This line doesn’t compile because you can only assign integers to varExample:
  1. varExample = "test";
The dynamic keyword, introduced in C# 4, makes certain scenarios that traditionally relied on the object keyword easier to write and maintain. In fact, the dynamic type uses the System.Object type under the hood, but unlike object it doesn’t require explicit cast operations at compile time, because it identifies the type at run time only:
  1. dynamic dynamicExample = 10;
  2. Console.WriteLine(dynamicExample.GetType());
This prints System.Int32.
In the following line, no cast is required, because the type is identified at run time only:
dynamicExample = dynamicExample + 10;
You can assign values of different types to dynamicExample:
dynamicExample = "test";
There’s a detailed blog post about differences between the object and dynamic keywords on the C# FAQ blog (bit.ly/c95hpl).
What sometimes causes confusion is that all of these keywords can be used together—they’re not mutually exclusive. For example, let’s take a look at this code:
  1. dynamic dynamicObject = new Object();
  2. var anotherObject = dynamicObject;
What’s the type of anotherObject? The answer is: dynamic. Remember that dynamic is in fact a static type in the C# type system, so the compiler infers this type for the anotherObject. It’s important to understand that the var keyword is just an instruction for the compiler to infer the type from the variable’s initialization expression; var is not a type.

Saturday, December 1, 2012

இஸ்ரேலிற்கு எதிரான சைபர் (இணையப்) போர்

-S.M. Mohammed Mafaz

இந்த மாதத்தின் மத்தியப் பகுதியில் பலஸ்தீனிய விடுதலை போராட்டக் குழுக்களுக்கும், இஸ்ரேலிய இராணுவத்திற்கும் இடையில் நடைபெற்ற போரில், பௌதிகக்களத்தில் பலஸ்தீனியர்கள் பலகீனப்படுத்தப்பட்டாலும், இணையக் களத்தில் இஸ்ரேலிய அரசாங்கம் ஆட்டம் கண்டது.
ஹமாஸ் அரசாங்கத்தின் உயர் இராணுவ கட்டளை தளபதியான அஹ்மத் அல்ஜாபரியை விமானக் குண்டுத்தாக்குதல் மூலம் கொலை செய்ததன் மூலம் இந்த போரை இஸ்ரேல் அரசாங்கமே முடுக்கி விட்டதாக பரவலான ஊடகங்களில் இருந்து தெரிய வருகின்றது. அதற்கு பிற்பாடு நடைபெற்ற கிலி கொள்ளும் போரில் 163 அப்பாவி பாலஸ்தீனியர்களும், 6 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டமை நாம் அறிந்ததே. இது ஒரு புறம் இருக்க, குறித்த போர் பற்றிய முதல் அறிவிப்பை இஸ்ரேலிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் முன்பே, இஸ்ரேலிய இராணுவம் தனது Twitter கணக்கில் போர் முரசை முழங்கியது. அஷ்ஷஹீத் அஹ்மத் அல்ஜாபரி கொல்லப்பட்டதை உறுதி செய்த பின்னர் பின்வரும் பதிவை தனது Twitter கணக்கில் இட்டது:
“ஹமாஸ் உறுப்பினர்களுக்கு நாங்கள் கூறிக்கொள்வதானது, வருகின்ற அடுத்த நாட்களில் நீங்கள் கீழ் அல்லது மேல் நிலை அதிகாரிகள் எவராக இருப்பினும், உங்களது முகங்களை நிலத்துக்கு வெளியே காட்ட வேண்டாம்”.

அதற்கு பிறகு தமது வீரத்தை பறைசாற்றுவதற்காக பின்வரும் Poster ஐ வெளியிட்டது:

இதற்கு பதில் அளிக்கும் முகமாக ஹமாஸினுடைய இராணுவப் பிரிவான இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் தனது Twitter கணக்கில் பின்வரும் பதிலை பதிவிட்டிருந்தது:

“அருள்பாளிக்கப்பட்ட எங்களது கைகள் உங்களது தலைவர்களையும், வீரர்களையும் அவர்கள் எங்கிருந்தாலும் வந்தடையும் (நீங்களாகவே நரகத்தின் வாயில்களை உங்களுக்காக திறந்துள்ளீர்கள்)”

இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் குறித்த Twitter கணக்கில் பலத்த செய்திக் கணைகள் ஏவப்பட்டுக் கொண்டிருந்தன. என்றாலும் இஸ்ரேலை பொறுத்தவரை, ஒட்டு மொத்த இணையப் போரில் பலத்த நெருக்கடியை சந்தித்துள்ளமை பல செய்திகளில் இருந்து புலனாகின்றது. இந்த குறும் போர் நடைபெற்ற காலப்பகுதியில் இஸ்ரேலிய அரசாங்க இணையதளங்களின் மீது 44 மில்லியனிற்கும் அதிகமான ஊடுருவல் (Hacking) முயற்சிகள் நடைபெற்றதாக அல்ஜசீரா ஆங்கில இணையத்தளம் தெரிவிக்கின்றது.

இஸ்ரேலிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த பெறுமானங்களில் அதிகமான தாக்குதல்கள் இஸ்ரேலிய இராணுவம் சார்ந்த இணைய தளங்களையே குறி வைத்துள்ளன. இஸ்ரேலிய ஜனாதிபதியினுடைய இணையதளம் 10 மில்லியன் தடவைகளும், வெளிநாட்டு அமைச்சினுடைய இணைய தளம் 7 மில்லியன் தடவைகளும், பிரதமரின் இணையதளம் 3 மில்லியன் தடவைகளும் தாக்குதல் முயற்சிகளுக்கு உள்ளாகி உள்ளன.
ஒரே ஒரு தாக்குதல் முயற்சி வெற்றி ஈட்டியதாகவும், குறித்த இணைய தளம் 10 நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் அமுலுக்கு வந்ததாகவும், தான் அந்த தளத்தை பெயர் குறிப்பிட விரும்பவில்லை எனவும் இஸ்ரேலிய நிதி அமைச்சர் Yuval Steinitz தெரிவித்துள்ளார்.

Anonymous எனப்படும் அநாமதேய சர்வதேச இணைய ஆர்வலர் குழுமம் ஒன்று, காஸா தாக்குதலுக்கு பதிலடியாக 700 இஸ்ரேலிய இணையதளங்களை தாக்கி, உருக்குலைத்து, அல்லது செயலிழக்கச் செய்ததாக ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது. “OpIsrael” என்று பெயரிடப்பட்டிருந்த இந்த இணையத்தாக்குதல் நடவடிக்கையின் பிரதான குறிக்கோளாக இருந்தது Mashav எனப்படும் இஸ்ரேலிய வெளிநாட்டு அமைச்சினுடைய சர்வதேச அபிவிருத்தி திட்டமாகும்.

தாக்கப்பட்ட அநேகமான இஸ்ரேலிய இணையத்தளங்களில் தோன்றிய பலதீனிய ஆதரவு பதாகை


தமது Twitter கணக்கில் Anonymous வெளியிட்டிருந்த ஒரு செய்தியில் மேற்படி அபிவிருத்தி திட்டத்தின் உள்ளக தகவல் களஞ்சியத்தை (Database) தாம் சேதப்படுத்தியுள்ளதாக கூறினர். அத்துடன் ஏனைய இணைய ஊடுருவிகளையும் (Hackers) தம்முடன் இணைந்து இஸ்ரேலிய அரசுக்கோ, இராணுவத்துக்கோ சொந்தமான அல்லது துணைபோகின்ற இணையதளங்களை தாக்குவதற்கு உதவுமாறு பகிரங்க அழைப்பு விடுத்திருந்தனர்.

இஸ்ரேலிய துணைப்பிரதமர் Silvan Shalom இனுடைய தனிப்பட்ட Twitter கணக்கும் குறி தவறவில்லை. Z Company Hacking Crew எனும் ஒரு இணைய ஊடுருவல் குழு இவரது Twitter கணக்கை கைப்பற்றி பலஸ்தீனிய ஆதரவு செய்திகளை வெளியிட்டிருந்தமை இஸ்ரேலிய வட்டாரங்களில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இணைய ஊடுருவலுக்கு இலக்கான இஸ்ரேலிய துணைப்பிரதமரின் Twitter கணக்கில் பதியப்பட்ட சில பாலஸ்தீனிய ஆதரவு செய்திகள்.

காடிமா கட்சியினுடைய இணையதளம் தாக்குதலுக்கு இலக்கானது

ஜெருசலேம் வங்கி (Bank of Jerusalem), மற்றும் இஸ்ரேலினுடைய காடிமா கட்சியினுடைய இணைய தளங்களும் மிக முக்கியமான இலக்குகளாக காவுகொள்ளப்பட்டன. காடிமா கட்சியினுடைய இணைய தளம் தாக்குதலுக்கு உள்ளாகி கொஞ்ச நேரத்தில் செயலிழக்கச் செய்யப்பட்டது.

ஊடுருவப்பட்ட பல இணையத்தளங்கள் செயலிழந்த நிலையில், ஏனைய தளங்கள் பலஸ்தீனிய ஆதரவு செய்திகளை அல்லது சுலோகங்களை காண்பித்தன.

தாக்குதல்கள் யாவும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தாலும், அநேகமானவை இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனிய பிரதேசங்களில் இருந்து தான் வந்திருப்பதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
“மில்லியன் கணக்கான இணைய தாக்குதல்களை தொடர்ந்தும் எமது அமைச்சினுடைய கணினிப்பிரிவு இடைமறிக்கும்” என்று Steinitz தெரிவித்துள்ளார். “கணினிமயப்படுத்தப்பட்ட தற்காப்பு முறைகளில் நாம் முதலிட்ட முதலீடுகளின் கனிகளை இன்று மகிழ்ச்சிகரமாக அனுபவிக்கின்றோம்” என்று மேலும் கூறியுள்ளார்.

Steinitz, அரசாங்க இணையதளங்கள் தாக்கப்படும் நிலைமையை கருத்தில் கொண்டு ,தமது அமைச்சினை அவசர முறைமையில் இயங்குமாறு பணித்துள்ளார்.

குறித்த இந்த காஸா யுத்தத்தில் இருசாராமுமே, குறிப்பாக இஸ்ரேலானது சமூக வலைத்தளங்களை யுத்த அரங்கில் ஒரு ஆயுதமாக பயன்படுத்தியுள்ளமை தெளிவாக புலனாகின்றது.
தற்போதுள்ள பெரும்பாலான சமூக வலைதளங்களில் இஸ்ரேலிய இராணுவம் தனது இருப்பை உறுதி செய்துள்ள நிலையில், பலஸ்தீனிய போராளிகள் Twitter இல் மாத்திரம் ஸ்திரமாக உள்ளனர்.
இஸ்ரேலினுடைய உயர் தகவல் அதிகாரியான Carmela Avner கூறும்போது,

“இந்த யுத்தம் மும்முனைகளில் நடைபெறுகின்றது. முதலாவது பௌதிக ரீதியானது, இரண்டாவது சமூக வலைத்தளங்கள்
, மூன்றாவது இணையம்”.
எது எவ்வாறு இருப்பினும் முஸ்லிம் உம்மத் இந்த உலகத்தில் உள்ள குழப்பவாதிகளை எதிர்த்து நிற்பதற்கு மனோ ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும், தொழினுட்ப ரீதியாகவும் பெருமளவில் தயாராக வேண்டி உள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை.

தகவல்கள் : AlJazeera.com, IDF Twitter, AlQassam Brigades Twitter

Friday, January 20, 2012

சர்வாதிகாரிகளும், இணையப் பயனர்களும்...!

இணையம் எவ்வாறு புதிய யுத்த உத்திகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது பற்றி ஒரு கட்டுரை ஒன்றை இங்கு பதிந்து இருந்தேன்:
இந்த யுத்தங்களின் பின்னணியில்,சாதாரண பயனர்களையும் பலிகடாவாக்கும் சில திட்டங்கள் உலக அளவில் அரங்கேற்றம் பெறுவது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்:

தற்போதைய உலகில் உள்ள அனைத்து நாடுகளும் சமூக வலைதளங்களினால் மிகவும் பயந்து போய் உள்ளன என்பதே நிதர்சன உண்மை! எகிப்திய மக்களின் புரட்சிக்கு வித்திட்ட சமூக தளங்கள் 'எங்கே நம்ம நாட்டுக்குள்ளும் புகுந்து பிரச்சினையை கொண்டு வந்து விட்டு விடுமோ' என்பதே ஒவ்வொரு ஆட்சியாளர்களின் வயிற்றிலும் புளியை கரைத்த வண்ணமுள்ளது. இவ்வகையான சமூக தளங்களை சீனா, சிரியா உட்பட பல நாடுகள் ஏற்கெனவே தடை செய்திருக்கிறன. அமெரிக்க அரசினால் புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள Protect IP Act (PIPA, the Senate bill), Stop Online Privacy Act (SOPA, the House Bill) ஆகிய சட்ட நடைமுறைகளுக்கு எதிராக கடந்த வாரங்களில் இணைய உலகில் கடும் எதிர்ப்பலைகள் கிளம்பி உள்ளன.

இணையதளங்களையே மூலதனமாக வைத்து ஆட்சியை பிடித்த திருவாளர் ஒபாமா அமெரிக்காவில் ஒரு புதிய சட்டத்தை, SOPA (Stop Online Piracy Act) என்ற பெயரில் கொண்டு வர முனைந்தார். இச் சட்டத்தினால் குறிப்பிட்ட சில இணையதளங்களை அமெரிக்காவில் தடை செய்வதின் மூலம் தம் நாட்டின் நிஜ - நிழல் பிம்பங்கள் உலக அரங்கில் ஏறாதவாறு தடுத்து விடலாம் என்ற நோக்கில் முயற்சித்தார். ஒபாமாவின் இந்த முயற்சிக்கு அமெரிக்க மக்கள் மட்டுமல்ல; பிரபல இணைய நிறுவனங்களும் (Google, Twitter, Facebook, LinkedIn போன்றவை) ஒன்றாக சேர்ந்து கடும் எதிர்ப்பு குரல் கொடுத்தன.

ஒரே வாரத்தில் 72,000 -த்துக்கு மேலான Domain -களை இழந்த GoDaddy





இப்படி இணைய ஜாம்பவான்களே தம் எதிர்ப்புகளை தெரிவித்து கொண்டு இருக்கையில், Go Daddy என்னும் Domain & Hosting வழங்கி வரும் நிறுவனம் தனது ஆதரவை இந்த 'ஹிட்லர் தன' புதிய சட்டத்திற்கு கொடுத்தது. ஏற்கெனவே செம கடுப்பில் இருந்த அமெரிக்கர்களுக்கு Go Daddy -இன் செயல் மேலும் எரிச்சலை உண்டு பண்ண, இதனுடன் வியாபார ரீதியாகவும், தனியாகவும் Domain வைத்திருந்தவர்கள் தங்களது கணக்குகளை விலக்கிக்கொண்டு வேறு நிறுவனங்களில் தங்களது Domain -ஐ இணைக்க தொடங்கினார்கள். Go Daddy தன் ஆதரவு அறிவிப்பை வார முதல் நாளான திங்கள் அன்று வெளியிட அன்று மட்டும் 8,800 Domain -கள் இந்த தளத்தில் இருந்து வெளியேறி வேறு நிறுவனங்களில் தங்களை இணைத்துக்கொண்டனர். தினம், தினம் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது.

Wikipedia -வும், தன் அறிவிப்பை அதன் உரிமையாளர் Jimmy Wales மூலம் Twitter -ரில், வெளியிட்டு தன் நிலையை உறுதிபடுத்தி உள்ளது.


தினமும் கூடிக்கொண்டே போன எதிர்ப்பு அலைகள் Go Daddy - ஐ ஸ்தம்பிக்கவே செய்து விட்டது. ஆம்!ஒரு வாரத்துக்குள் 72,000 -த்துக்கு மேலான Domain - களை இழந்து விட்டது. இதனை எதிர் கொள்ளவியலாத நிலையில் Go Daddy, SOPA -க்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கியது. இதன் பிறகு, விலகிக்கொண்ட தனது வாடிக்கையாளர்களை மீண்டும் இனைந்து கொள்ள கேட்டுக்கொண்டும், எவருமே சமாதானம் ஆனதாக தெரியவில்லை. இதோடு நில்லாமல், கடந்த டிசம்பர் 29 ஐ ,Go Daddy -லிருந்து விலகும் நாளாக (Move Your Domain Away from GoDaddy Day) அறிவிக்கப்பட்டது.

தமது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காக பிரபல இணையத்தளமான விக்கிப்பீடியா ஆங்கிலத் தளத்தை ஜனவரி 18 ஆம் திகதி, 24 மணிநேரம் முடக்குவதாக அதிரடியாக அறிவித்தார் ஜிம்மி வேல்ஸ்.

அதன் படி குறித்த தினம் ஏதாவது ஒரு தகவலை விக்கிப்பீடியா இணையத்தளத்தில் தேடிய போது:

wikipedia-strick.jpg

"சுதந்திர தகவல்கள் இல்லாத உலகை கற்பனை செய்து கொள்ளுங்கள். மனித வரலாற்றிலேயே பலர் மில்லியன் கணக்கான மணிநேரம் உருவாக்கிய உலகின் மாபெரும் தகவல் களஞ்சியமாக திகழ்கின்றது விக்கிப்பீடியா. ஆனால் அமெரிக்க காங்கிரஸ் சுதந்திர தகவல்களை முடக்கிவிட திட்டமிடுகின்றது இந்த நடவடிக்கையை எதிர்ப்போம்"

என்று கறுப்புத் நிறத்தில் அறிவித்தல் ஒன்றை போட்டிருந்தது. விக்கிப்பிடீயாவின் இந்த முடிவினால் அத்தளத்திற்கு வருகை தரும் 25 மில்லியன் பாவனையாளர்கள் பாதிக்கபடுவார்கள் என கணக்கிடப்பட்டது.

2012 ஆம் ஆண்டின் ஜனவரி 18ம் திகதி முக்கியமான நாளாகும். ஏனெனில் அன்றைய தினமே வரலாற்றில் மாபெரும் இணைய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என sopastrike.com தெரிவிக்கின்றது. இதற்கு ஏனைய இணையத்தளங்களின் ஆதரவையும் கோரினர்.

சில விவகாரங்களில் விக்கிபீடியா சரியான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டியிருந்தாலும் நடுநிலையைத் தவறவிடுவதில்லை எனவும், "என்சைக்ளோபீடியா நடுநிலையானதுதான், ஆனால் அதற்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது அது வேடிக்கை பார்க்காது" என விக்கிப்பீடியா ஸ்தாபகர் ஜிம்மி வேல்ஸ் தெரிவித்திருந்தார்.

கூகிள் நிறுவனமும் தனது பங்கிற்கு https://www.google.com/landing/takeaction/ என்ற பக்கத்தில் போராட்டத்தை ஆரம்பித்தது:
takeaction.png



சேவை நிறுத்தத்துக்கு நல்ல வரவேற்பு:

இணைய பாவணையாளர்களிடையே விழிப்புணர்வு மேற்கொள்ளும் முகமாக விக்கிபீடீயாவின் ஆங்கில பிரிவு மேற்கொண்ட திடீர் வேலைநிறுத்தம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்காவின் மிக பிரபலமான இணையத்தளங்களில் 10 வது இடத்திலிருக்கும் விக்கிபீடியா நேற்றைய ஜனவரி 18 போராட்டத்தின்
பின்னர் 19 ஆம் திகதி அன்று தனது முகப்பு பக்கத்தில் "விக்கிபீடியாவின் பாதுகாப்புக்காக ஒத்துழைத்தமைக்கு நன்றி" என குறிப்பிடப்பட்டிருந்தது.

'எனினும் நாம் இன்னமும் அதை செய்துமுடிக்கவில்லை' எனவும் கூறியுள்ளது. அமெரிக்காவில் கூகுள் ஹோம்பேஜில் கறுப்பு கட்டத்துடன் தோன்றிய லோகோவும் பலரின் கவனத்தை பெற்றிருந்தது. குறித்த லோகோவின் ஊடாக, 4.5 மில்லியன் பேர் அமெரிக்க காங்கிரஸுக்கு எதிரான ஆன்லைன் பெட்டிஷனில் கையெழுத்திட்டுள்ளனர்.
1492659-google-sopa-censorship-617-409.jpg

குறித்த தினத்தில் இச்சட்டத்தை எதிர்த்து 2.4 மில்லியன் குறுஞ்செய்திகள் டுவிட்டர் ஊடாக பதியப்பட்டுள்ளது.

விக்கிபீடியாவின் ஆங்கில பிரிவின் முகப்பு பக்கத்தின் ஊடாக இச்சட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வு பதிவை 4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ, லாஸ்வேகாஸ், நியூயோர்க் நகரங்களில் இச்சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர் பேர்க், ஆர்ப்பாட்ட தினமன்று விடுத்த அறிவிப்பில்,
"இணையம் சார்ந்த சார்புக்கொள்கை உடைய அரசியல் தலைவர்களே தற்போது இந்த உலகத்துக்கு தேவை. இவ்வாறான தலைவர்களுடன் நாம் பல மாதங்களாக பேசிவருகிறோம். இதற்கான மாற்று வழிகளை தேடி வருகிறோம்" என தெரிவித்திருந்தார்.

அவருடைய சொந்த பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிருந்த இப்பதிவை 50,000 ற்கு மேற்பட்டோர் லைக் செய்திருந்தனர்.

கடந்த வருடம், நவம்பர் மாதம் அமெரிக்க செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையில் முன்மொழியப்பட்ட இணைய திருட்டு தடுப்பு சட்ட வரைபானது (Stop Online Piracy Act, SOPA) மேலும் பல கலந்துரையாடல்களின் பின்னர் எதிர்வரும் வாரமளவில் சட்டபூர்வமாக அமலாக்கப்பட சந்தர்ப்பம் அதிகரித்துள்ளது. இது இணைய தணிக்கை முறை, இணையத்தை முடக்குவதாகவும், சுதந்திர பேச்சு மற்றும் குற்றவியல் முன்னறிவிப்பாளர்களுக்கு பயமுறுத்துவதாகவும் இருப்பதாக இச்சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

உதாரணத்திற்கு சிறிய வசதிகளுடன் இயங்கும், வெளிநாட்டு இணைய தளங்கள், வேறொரு பிரபலமான இணைய தளத்திலிருந்து ஒரு தகவலை அதன் அனுமதியின்றி பிரதி செய்து பிரசுரிக்குமாயின் அல்லது ஆட்சேபணைக்குரிய கருத்து பகிர்வொன்றை பிரசுரிக்குமாயின் குறித்த சிறிய இணையத்தளம் மீது வழக்கு தாக்கல்
செய்யலாம்.

கூகுள், பேஸ்புக், யாஹூ போன்ற தேடுபொறிகளில் குறித்த பதிவு பற்றிய சொற்களையே தேட முடியாத படி முடக்கலாம். அமெரிக்க வர்த்தக சந்தையை பாதுகாப்பதற்காகவே இச்சட்டம் என வெளிப்படையாக சொல்லப்பட்டாலும், உண்மையில் இணைய உலகின் இலவச தகவல் பகிர்வு சேவையை முடக்குவதற்கே அமெரிக்கா இச்சட்டம் மூலம் முயற்சிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதற்கு முன்பு ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட ACTA (Anti-Counterfeiting Trade Agreement) என்கிற உலகளாவிய சட்டமூலமும் இணைய திருட்டுக்களை தவிர்ப்பதற்காக இரகசியமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அவற்றை வெளிப்படுத்துமாறு எழுந்த குரல்களை தட்டிக்கழித்து சரியான பேச்சுவார்த்தைகளோ முடிவுகளோ எட்டப்படாத நிலையில் இந்த புதிய சட்டமூலங்கள் இணைய ஜாம்பவான்களாக திகழும் நிறுவனங்கள் முதல் சாதராண இணையப் பயனர்களிடையே பலத்த எதிர்ப்புக்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தி உள்ளன.

SOPA, PIPA மற்றும் ACTA பற்றி இன்ஷா அல்லாஹ் மீண்டும் ஒரு பதிவில் விரிவாக பார்ப்போம். இந்த சட்ட மூலங்கள் எமது நவீன வாழ்வில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை விபரிக்கும் குறும்படம் ஒன்று இதோ:




மூலங்கள்: 1) KTIC Google Group

S. M. Mohammed Mafaz,
BSc.(Hons) IT - SLIIT,
Freelance Software Solutions Consultant,
IT Demonstrator (OUSL - Puttalam Study Centre)
---------------------------------------
------------------------------------------------


Thursday, December 29, 2011

ஐந்தாவது பரிமாணத்தில் போராடுதல்

தொழில்நுட்ப முன்னேற்றமும் , நூதனங்களும் இன்றைய உலகின் போராட்டங்களின் உத்திகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. அவை இன்று இணைய (சைபர்) உலகை (Cyber World) புதிய யுத்த முன்னரங்காக மாற்றம் பெறச்செய்வதில் பாரிய செல்வாக்கு செலுத்துகின்றன. இன்றைய உலகின் போராட்டங்களிலும், புரட்சிகளிலும் இணையத்தின் பங்கு, இதுதொடர்பாக முன்னணி நாடுகளின் நிலைப்பாடு குறித்த ஒரு சிறு கட்டுரை அண்மையில் அல்ஜசீரா ஆங்கில சேவை வலையமைப்பின் இணையதளத்தில் வந்த ஒரு கட்டுரையை தமிழில் இயன்றவரை மொழி பெயர்த்து வாசர்களுக்காக பகிர்ந்து கொள்கின்றேன்.


ஐந்தாவது பரிமாணத்தில் போராடுதல்


யுத்த முறைமைகளில் ஐந்தாம் பரிமாணம்என்று அது அழைக்கப்படுகின்றது. நிலம், கடல், வான், மற்றும் விண்வெளிகளுக்கு மேலதிகமாக இன்று இணைய(சைபர்) உலகமும் புதிய யுத்த முன்னரங்காக பரிமாற்றம் அடைகின்றது.


Cyberwar.jpg

தொழில்நுட்ப புதுமைகள், இன்றைய நாளின் யுத்த உத்திகளை மாற்றிக்கொண்டு வருகின்றன. இன்றைய உலகனிது ஆயுத களஞ்சியத்தில் புதிய கருவிகள் சேர்ந்துள்ளன. மின்காந்தவியல், நவீன தகவல்கள், மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் உதவியினால், புது வகையானதொரு இலத்திரனியல் யுத்தம் ஒன்று உருவாகியுள்ளது. சைபர் யுத்தம்அல்லது இணைய யுத்தம்என்று அழைக்கப்படுகின்ற இந்த யுத்தமானது பல்வேறு அரசாங்கங்களுக்கும், இராணுவங்களுக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைவதாக கருதப்படுகின்றது.


உங்களிடம் ஒருசில கெட்டித்தனமான மனிதர்களும், ஒரு கணினியும் இருந்தால் நிறைய விடயங்களை சாதிக்கலாம். யுத்த வானூர்தியோ, யுத்த தாங்கியோ, இராணுவமோ தேவைப்படாது. உங்களது நாற்காலியில் அமர்ந்தவாறே இன்னொரு நாட்டிற்குள் ஊடறுத்துச் சென்று பாரிய சேதத்தை ஏற்படுத்தலாம் என்று Alon Ben David என்கிற இஸ்ரேலினுடைய Channel 10 இனது இராணுவ ஆய்வாளர் குறிப்பிடுகின்றார்.


இன்று வளர்ந்து வருகின்ற விடயங்களாக சைபர் யுத்தங்கள் மாத்திரம் கருதப்பட முடியாது. இணையமானது இன்று இணைய கிளர்ச்சிகளை (Cyber Activism) முடுக்கிவிட்டுள்ளது. தகவல்களை பரிமாறுவதன் மூலம், ஆன்லைனிலும், வீதிகளிலும் தேவையான நடவடிக்கைகளை, மக்கள் தாங்களாக எடுத்து செயற்படுத்துவதற்கான ஆதரவை இலகுவாக பெறக்கூடியதாக உள்ளது.


arton19173-8e070.jpg


அரபுலக நாடுகளில் அண்மைய காலங்களில் பரவி இருக்கும் புரட்சிகளை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களான Facebook, Twitter, YouTube ஆகியன இந்த புதிய இணைய கிளர்ச்சிகளுக்கு வழிசமைப்பதில் முன்னணி வகித்துள்ளன.

அராபிய வசந்தம் (Arab Spring) என்று அழைக்கப்படுகின்ற இந்த புரட்சியானது இலத்திரனியல் புரட்சியாக கருதப்படுகின்றது. போராட்டங்கள் தொடர்பான கள நிலவரங்களை தங்களது கையடக்க தொலை பேசிகளின் மூலம் நிழற்படங்கள் எடுத்து தங்களது கணினிகளின் ஊடாக வெளி உலகத்துக்கு பதிவேற்றம் செய்து தெரியப்படுத்தியதன் மூலம், சாதாரண குடிமக்கள், ஊடகவியலாளர்களாக மாறியுள்ளனர். அந்நாடுகளின் அரசாங்கங்கள் Satellite செய்தி நிறுவன சமிக்ஞைகளை இடைமறித்திருக்கலாம், வெளிநாட்டு ஊடகவியலாளர்களை தங்களது நாட்டினுள் நுழைவதற்கு தடைகளை விதித்திருக்கலாம், ஆனால் தங்களது சொந்த குடிமக்கள் அவர்களாகவே செய்தி தெரிவிப்பாளர்களாக மாறுவதிலிருந்து கட்டுப்படுத்த அந்த அரசாங்களால் முடியாமல் போயின.


இணைய கிளர்ச்சியிலிருந்து இணைய யுத்தம்

அரசியல் நடவடிக்கைகளுக்காக இணையத்தை உபயோகிப்பது ஒரு விடயம். ஆனால் கணினி வலையமைப்புக்களையும், தகவல் களஞ்சியங்களையும் ஊடறுத்து இடைமறிப்பது, இணைய யுத்தத்தை ஒரு படி மேலே நகர்த்துகின்றது. ஒரு சைபர் தாக்குதலானது (Cyber-Attack), அரசாங்கங்களினதும், பொருளாதார நிறுவனங்களினதும் முக்கிய செயற்பாடுகளை ஸ்தம்பிதமடையச் செய்ய வல்லது என அமெரிக்க பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்திருப்பது ஒரு புறமிருக்க, ஐக்கிய அமெரிக்கா அதனை ஒரு பாரிய அச்சுறுத்தலாக கருதுகின்றது.


சைபர் வெளி எவ்வாறு உண்மையாக உள்ளதோ, அதனுடன் வரும் அபாயங்களும் உணமையே. இனி மேல், எமது எண்ணியல் கட்டமைப்புக்களும், நாம் தினசரி தங்கியிருக்கும் கணினிகளும், வலையமைப்புக்களும், எமது முக்கிய தேசிய சொத்துக்களாக கருதப்பட வேண்டும். என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.


கடந்த சில வருடங்களாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் சைபர் யுத்தம் ஒன்று நடைபெற்று வளர்ந்து வருகின்றது. ஒவ்வொரு தரப்பும், தங்களது எதிர் தரப்பானது, ஹேக்கர்களின்(Hackers) இராணுவம் ஒன்றை வைத்து தங்களின் மீது சைபர் தாக்குதல்களை மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளன. (குறிப்பு: ஹேக்கர்கள் எனப்படுவோர், கணினி வலையமைப்புக்களை ஊடறுத்து தகவல்களை களவாடுவதில் அல்லது மாற்றுவதில் விற்பன்னர்கள் என பொருள் கொள்ளலாம்)

இந்த யுத்தத்தின் பிரதானமான போராட்ட களமாக கூகிள் (Google) நிறுவனத்தின் வழக்கு அமைந்துள்ளது. இவ்வமெரிக்க நிறுவனமானது, தணிக்கைகள், அரசாங்க பின்புலத்துடன் நடைபெறும் ஹேக்கிங் நடவடிக்கைகள் தொடர்பிலான சீன அரசாங்கத்துடன் ஏற்பட்ட பிணக்கில் கடந்த 2010 ஆம் ஆண்டு, பகுதியளவில் சீனாவிலிருந்து வெளியேறியது.

tumblr_kxj0kgwzlk1qzp3kyo1_500.jpg

கூகிள் நிறுவனத்தின் உதவியுடன் தங்களது நாட்டை வேவு பார்ப்பதாக சீனா அமெரிக்காவை குற்றம் சாட்டும் அதேவேளை, தங்களது நிறுவன ஊழியர்களது மின்னஞ்சல் கணக்குகளை (Email Accounts) ஊடறுத்து தகவல்களை களவாடுவதாக கூகிள் நிறுவனம் சீனாவை குற்றம் சாட்டியுள்ளது.


சுதந்திரமான ஹேக்கர்களுக்கும், அரசாங்கங்களுக்காக துணை போகும் ஹேக்கர்களுக்கும் வேறுபாட்டை நாம் காண வேண்டும். சில நாடுகளின் அதிகாரிகள், தங்களது சுய இலாபங்களுக்காக திறமையுள்ள, சிறந்த தொழில்நுட்ப புலமையுள்ள ஹேக்கர்களை கூலிக்கு அமர்த்துகின்றனர். எதுவுமே சாத்தியமாக இருக்கும் இந்த கால கட்டத்தில், நாடுகள் ஒவ்வொன்றும் ஏனைய நாடுகளை குறை கூறுவதை தவிர்ந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த யுத்தத்தில் எல்லா தெரிவுகளும் திறந்த அமைப்பில் இருக்கின்றன. என்று சீன ஹேக்கரான ஹான் தெரிவிக்கிறார்.


ஐக்கிய அமெரிக்கா தனது முன்னாள்/இந்நாள் எதிரியான ஈரானுடனும் அண்மைக்காலங்களில் சைபர் யுத்தங்களில் ஈடுபட்டு வருகின்றது.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்ச்சைக்குரிய ஈரானிய அதிபர் தேர்தலில் மஹ்மூத் அஹ்மெடிநேஜாத் மீண்டும் வெற்றி பெற்றதை அடுத்து அந்நாட்டில் ஏற்பட்ட ஈரானிய அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இந்த சைபர் யுத்தம் ஆரம்பமாகி இருக்கும் என்று கருதப்படுகின்றது.

மக்களை ஆர்ப்பாட்டங்களுக்கு ஒன்று திரட்டும் ஊடகமாக எதிர் தரப்பினர் இணையத்தை பயன்படுத்துவதாக ஈரானிய அதிகாரிகள் கருதினர். இதனால் அவ்வதிகாரிகள் இணையத் தொடர்பை துண்டித்து விட கருதினர்.

ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் YouTube, Twitter போன்றவற்றை தொடர்ந்தும் உபயோகித்தனர். Twitter நிறுவனம் தமது வழமையான பராமரிப்பிற்காக தமது சேவையை தற்காலிகமாக இடைநிறுத்த கருதிய போது, ஐக்கிய அமெரிக்க அரசு செயலாளர் ஹிலறி கிளிண்டன், ஆர்ப்பாட்டங்கள் தொடரும் வரை சேவையை தொடர்ந்து ஆன்லைனில் வைக்குமாறு கோரினார்.


மின் கண்களும், மின் காதுகளும்

இஸ்ரேல் அரசானது, தங்களது முக்கிய வலையமைப்புக்களை இணைய தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக, மத்திய கிழக்கில் சைபர் கட்டளை தலைமையகத்தை (Cyber Command) நிறுவி உள்ளது. தங்களது தொழில்நுட்ப வல்லமைகளை காண்பிப்பதற்காக இஸ்ரேல், தமது எல்லை புறங்களையே தெரிவுசெய்கின்றன. லெபனானுடனான வட புற எல்லையில் இஸ்ரேல், பாரிய மின் கண்களும், மின் காதுகளும் கொண்ட ஒரு வலையமைப்பை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரேலுக்கும், லெபனானின் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் தற்போது நடைபெறும் உளவுத்துறை யுத்தத்தில் அதிகளவில் அதிநவீன மின்னியல் கருவிகளே உபயோகப்படுத்தப்படுகின்றன.

பெப்ரவரி 2010 இல், தன்னை (இஸ்ரேல்)மொசாட் இனுடைய உளவாளி என்று ஒப்புக்கொண்ட ஒருவரை லெபனான் கைது செய்தது. அவர், அதிநவீன கண்காணிப்பு சாதனத்தொகுதி ஒன்றை தன்னுடைய காரினுள் மறைக்கப்பட்ட ஒரு பெட்டியில் இருந்த கணினியையும், கையடக்க தொலைபேசியையும் உபயோகித்து இஸ்ரேலிலுள்ள தன்னுடைய கையாட்களுக்கு சமிக்ஞைகள் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டது.

கேட்பதற்கு விஞ்ஞான புனை கதை போன்று இருந்தாலும், இக்கிரகத்திலுள்ள ஒவ்வொரு தொலை பேசி அழைப்பையும், மின்னஞ்சலையும் ஒற்று கேட்கும்/பார்க்கும் சர்வதேச உளவு பார்க்கும் வலையமைப்பு ஒன்று இருப்பது உண்மை.

சரியான கருவிகள் உள்ள நிலையில் தொலைபேசி அழைப்புக்களையும், குறுஞ்செய்திகளையும் ஒற்று கேட்பது/பார்ப்பது நாளுக்கு நாள் இலகுவடைகின்றது. விஷேடமாக இன்று உலகளாவிய ரீதியில் அதிகளவிலான தொலைபேசி வலையமைப்புகளில் உபயோகப்படுத்தப்படும் GSM தொழில்நுட்பமானது இதனை இன்னும் இலகுபடுத்துகின்றது.


உங்களது கைத்தொலைபேசியை 30 செக்கன்களுக்கு என்னிடம் தாருங்கள், 30 செக்கன்கள் தனியாக உங்களது கைத்தொலைபேசியுடன் என்னை விடுங்கள், உங்களது கைத்தொலைபேசியை பயணிக்கும் ஒலிவாங்கியாக செயல்படுவதற்கான மென்பொருளை அதனுள் நிறுவுவேன். அந்த கணத்திலிருந்து, அது பணிநிறுத்தம் செய்யப்பட்டிருந்தாலும், உங்களது கைத்தொலைபேசி, நான் தீர்மானிக்கும் ஒரு இலக்கத்தினூடாக உங்களை சுற்றியுள்ள அனைத்தையும் ஒலிபரப்பும் என்று Alon Ben David மேலும் தெரிவிக்கின்றார்.


துணிச்சலான புதியதோர் உலகமா?

இணைய பயனர்கள், பாரிய அளவிலான தனியார் தகவல்களை சமூக வலைத்தளங்களுக்கு தன்னார்வத்துடன் வழங்குவதையிட்டு அநேகமான ஆய்வாளர்கள் வியப்படைகின்றனர்.

மேலும், ஒருவருடைய கைத்தொலைபேசியிலோ, கணினியிலோ தகவல்களை திருடும் நோக்கத்துடன் மென்பொருட்களை நிறுவுவது ஐந்தாவது பரிமாணத்தில் நிகழும் யுத்த முறைமைகளில் புதியதோர் யுத்த உத்தியாக பரிணமித்துள்ளது.


தனிப்பட்ட தகவல்கள், மின்னஞ்சல்கள், கிரெடிட் கார்டுகள் என்று எமது முழு வாழ்வும் இணையத்திலேயே உள்ளது. Facebook, Google, Amazon போன்ற தளங்களுக்கு இத்தகவல்கள் அனைத்தையும் வழங்குகின்றோம். இத்தளங்களில் இருக்கும் தகவல்களின் அளவை அறிந்து, அரசாங்கங்கள் இவர்களின் மீது அதிகளவான அழுத்தங்களை பிரயோகிக்கின்றன. இவ்வரசாங்கங்கள் இத்தளங்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களை கோரும் போது, அவர்கள் கேட்டதை கொடுத்தன, கொடுத்துக்கொண்டும் இருக்கின்றன என்று தகவல் தொழில்நுட்ப நிபுணரான மர்வான் தாஹிர் குறிப்பிடுகின்றார்.


நாம் அனைவரும் துணிச்சலானதொரு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இதனால் விளையப்போகும் சாத்தியக்கூறுகள் எல்லையற்றதாகவும், முடிவற்றதாகவும், நிச்சயிக்க முடியாததாகவும் எண்ணத்தோன்றுகின்றது.


Original English Source: http://www.aljazeera.com/programmes/aljazeeraworld/2011/10/2011101916939402528.html


ஜசாகல்லாஹு ஹைரன்
S. M. Mohammed Mafaz,
BSc.(Hons) IT - SLIIT,
Freelance Software Solutions Consultant,
IT Demonstrator (OUSL - Puttalam Study Centre)